[ad_1]

ஹாலிஎல, பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காரொன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுள்ளனர்,

மேலும் இருவர் படுகாயமடைந்து பதுளை பொது வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

70.51 வயதுடைய இருவர் உயிரிழந்ததாகவும் 53.22 வயதுடைய இருவர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

ஹாலிஎலல வினாயகர் ஆலயத்திற்கு அருகில் இன்று காலை 6.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது

பண்டாரவளை பகுதியில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பதுளை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்இ ஹாலிஎல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ருவன் குணதிலக தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

[ad_2]

Source link